திருக்குறள்

1004.

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.

திருக்குறள் 1004

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.

பொருள்:

யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.

மு.வரததாசனார் உரை:

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.